Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Thursday, December 21, 2023

ஆசாரக்கோவை பாடல் 11 - 15

 

கயத்தூர் பெருவாயின் முள்ளியார் இயற்றிய 

ஆசாரக்கோவை



 





பாடல் 11 - 15

பாடல் 11

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்
உடுத்தாடை நீருட்பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத் தென்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை

பொருள்

ஆடையின் பயன்பாட்டினை உரைக்கும் பாடல் இதில் ஓர் ஆடை உடுத்தி நீராடுதல் சிறப்பு இரண்டு ஆடைகள் உடுத்தி உணவு உண்பது சிறப்பு நீரில் துவைத்த ஆடையை அதே நீரில் பிழிவது சிறப்பல்ல ஒரு ஆடையை உடுத்தி கற்றோர் சபைமுன் வருவது சிறப்பல்ல இவையாவும் முந்தையோர் கண்ட முறை

மறை பொருள்

அக்காலத்தில் நதிகளில் நீராடுவது வழக்கம் அவ்வாறு நதிகளில் நீராடும் பொருட்டு தனித்து நீராடாமல் மற்றவர்களுடன் இணைந்து நீராடுவது ஆபத்தான நிலைகளிலிருந்து காப்பாற்றும் மேலும் விருந்தோம்பலை மையப்படுத்தி கூறுகையில் உணவு உண்ணும் பொழுது ஒருவர் இல்லாமல் இருவராக அமர்ந்து உணவை பகிர்ந்து உண்பது சிறப்பு அதுபோல நோயால் அவதிப்பட்டு இருக்கும் காலங்களில் உடுத்திய ஆடையை மீண்டும் உடுத்தது இருப்பது சிறப்பு மேலும் பலர் இறக்கும் சபையில் தனது கருத்தை மட்டும் மையப்படுதல் நன்றன்று பிறரின் கருத்துக்களையும் கேட்டு இருத்தல் சிறந்தது என்பவை முந்தையோர் கண்ட முறை

 பாடல் 12

தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறருடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து

பொருள்

தலையில் எண்ணெய் வைத்தபின் மற்ற பொருட்களை தொடாமல் இருப்பது நல்லது  மற்றவர்கள் உடுத்தி கலைந்த ஆடையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது  பிறர் அவசரம் என்று ஒரு செயலை சொன்னாலும் மற்றவர்களின் காலனியை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது

மறை பொருள்

ஒருவர் தான் பட்ட கடனை பிறரிடம் நகர்தல் தவறு பிறர் செய்த செயல்களை தனது என்று உரைப்பது தவறு எத்தகைய நிலையிலும் பிறர் செய்த தவறான செயல்களை செய்யாமல் இருத்தல் நல்லது

 பாடல் 13

நீருள் நிழற்புரிந்து நோக்கார்  நிலமிராக்
கீறார் இராமரமும் சேரார் இடரெஎனினும்
நீர்தொடா தெண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை

பொருள்

தனது பிம்பத்தை நீரில் பார்ப்பது நல்லது அல்ல தேவை இல்லாமல் நிலத்தை சீண்டுவது நல்லது அல்ல இரவு நேரங்களில் மரங்களின் அருகில் செல்லாது நல்லது அல்ல விரல்களில் நீர் தொடாமல் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல்  நல்லது அல்ல எண்ணெய் தேய்த்துக்கொண்டபின் நீராடாமல் அசுத்தங்களை பார்ப்பது  நல்லது அல்ல .

மறை பொருள்

ஓடாமல் ஓரிடத்தில் தேங்கி நிற்கும் நீரில் விஷ ஜந்துக்கள் இருக்கும் ஆகையால் அத்தகைய நீர்நிலைகளில் முகத்தை அழகு பார்ப்பது நல்லது அல்ல மண் தரை பலர் நடக்கும் தளம் அதில் புழுக்கள் இருப்பதனால் மண்தரையை சீண்டுதல் நல்லது அல்ல இரவு நேரங்களில் மரங்கள்  கரியமில வாயுவை தருவதனால் இரவு நேரங்களில் மரங்களின் அருகில் செல்வது நல்லது அல்ல எண்ணெய்யின் மேல் தூசி பற்றுவதால்  விரல்களில் நீர் தொடாமல் எண்ணெய் பொருட்களை தொடுவது நல்லது அல்ல எண்ணெய் தேய்த்த பின் கண்ணில் உஷ்ணம் வருவதால் அது அசுத்தத்தின்மேல் உள்ள நுண்ணுயிரிகளை கிளறும் ஆகையால் எண்ணெய் தேய்த்தபின் நீராடாமல் அசுத்தங்களை பார்ப்பது நல்லடி அல்ல

 பாடல் 14

நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்த தெனினும் தலையொழிந் தாடாரே
ஆய்ந்த அறிவினவர்

பொருள்

நீராடும் நிலைகள் தேங்கிய நீரை கொண்டதாக இருக்கும் அங்கு நீராடும் பொழுது சிறுநீர் கழித்தல்  எச்சில் உமிழ்தல் நீரில் விளையாடுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் தலைமுடியை அவிழ்த்து நீராடுதல் நல்லது அல்ல

 பாடல் 15

ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் நாயிறு
தம்பூத மெண்ணா திகழ்வானேல் தன்மெய்க்கண்
ஐம்பூதம் அன்றே கெடும்

பொருள்

இயற்கையில் ஐந்து பூதங்கள் சமநிலையில் இயங்கும்போது இயற்கை சீராக இயங்கும் அதுபோல உடம்பும்  அதை சார்ந்த ஐம்புலன்களும் சீராக இயங்க நல்ல சிந்தனை ஆரோக்கியமான உணவு தேவையான உறக்கம் மற்றும் உடல் உழைப்பு நன்றாக இருத்தல் வேண்டும்

 மறை பொருள்

வான சாஸ்திரத்தில் சூரியனும் சந்திரனும் ஐம்பூதங்களைக் குறிக்கும் குரு புதன் சுக்கிரன் செவ்வாய் மற்றும் சனியும் ராகுவின் பிடியில் சிக்கும் நிலையில் உடல் ஆரோக்கியம் குன்றி ஐம்புலன்களும் கெடும்


Monday, December 18, 2023

ஆசாரக்கோவை பாடல் 6 - 10

கயத்தூர் பெருவாயின் முள்ளியார் இயற்றிய 

ஆசாரக்கோவை



 





பாடல் 6 - 10

பாடல் 6

எச்சிலார்நோக்கார் புலைதிங்கணாய்நாயி
றத் தகவீழ்மீனோடிவவைந் துந்தெற்றென
நன்கறிவார் நாளும்விரைந்து

பொருள்

நல்லறிவும் கற்றதனால் அமைந்த தெளிவும் உடைய மக்கள் எந்நாளும் அசுத்தம் சந்திரன் நாய் சூரியன் விண்மீன் எனப்படும் ஏரி நட்சத்திரம் இவை இந்தையும் கல்வியும் பகுத்தறிவும் இல்லாதவர் போல பார்க்கமாட்டார்கள்.

மறை பொருள்

புலவர் உரைக்கும் ஐந்து காரனிகளும் வான சாஸ்திராத்தை  வைத்து பார்கையில் அசுத்தம் சந்திரன் நாய் சூரியன் விண்மீன் என்பவை சனி சந்திரன் ராகு சூரியன் சுக்ரனாகிய ஐந்து கிரஹங்களை குறிக்கின்றது இந்த ஐந்து கிரகங்களையும் கற்றவர்கள் பகுத்து ஆராயாமல்  மேலோட்டமாக பார்க்கமாட்டார்கள்.

மறை பொருள்

அசுத்தம் எனும் குப்பையையும் தெளிவு தரும் சந்திரனையும் கண்டு பகுத்து அறியாது தவிக்கும் நாயின் நிலைபோல பகுத்து அறிவோர் நில்லாமல் ஒளிதரும் சூரியனைப்போலவும் இரவில் தன் வழியில் செல்லும் விண்மீனைப்போல சிறந்து காண்பர்

பாடல் 7

எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்க மிரண்டும் இணைவிழைச்சு வாயில்
விழைச்சிவை எச்சிந் நான்கு
பொருள்

பொருள்

உடல் சார்ந்த பல இயக்கங்கள் உள்ளன அவற்றுள் தனிநபர் சார்ந்த இரு இயக்கங்களான மலம் கழித்தல் மற்றும் சிறுநீர் கழித்தல் ஆகியவைகளும் இருவர் சார்ந்த காதல் மற்றும் காமம் வழி அமையும் விழிச்சிகளையும்  அவற்றின் இயக்கங்களிப்பின் உடலை நீரால் தூமை செய்வது நன்மை தரும் மேலும் இவை நான்கு இயக்கங்களும் மறைவில் இயக்குதல் நன்று

மறை பொருள்

உயிரியல் வழி இப்பாடல் காணும் நிலையில் மலம் சிறுநீர் காதல் காமம் வழி வரும் அசுத்தங்கள் என்று ஒதுக்கிவிட இயலாது இவைகள் செடி கொடிகளுக்கு நன்மையும் புதிய உயிர் பிறக்க நல்லதோர் எச்சிலாக பயன்பெறுகிறது

மறை பொருள்

வான சாஸ்திரத்தில் காலபுருஷ தத்துதின் படி 8ஆம் வீடான விருச்சிகத்தில் அமையும் உடல் உறுப்புக்கள் மாலன் சீறுநீர் மற்றும் காமம் சார்ந்த இயக்கங்களுக்கு பயன்படுபவை இத்தகைய உறுப்புக்கள் சீராக இயங்கினால் நோய் நொடி இல்லாது நீண்ட ஆயுளைத்தரும்  அவற்றின் சீர்கேடு நீண்ட கடும் நோயினைத்  தரும் மேலும் இங்கு மதி நீச்சம் பெறுவதனால் மனம் சனி மற்றும் ராகுவால் இயக்கப்பட்டு உறுப்புகளுக்கு சீர்கேடு தரும் நிலையை தவிர்க்க நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுவது நன்மை தரும்

பாடல் 8

நால்வகை யெச்சிலும் நன்கு கடைப்பிடித்
தோதார் உரையார் வளராரே  எஞ்ஞான்றும்
மேதைக ளாகுறுவார்
பொருள்

பொருள்

நல்லவைகளை கற்றறிதலும் பயிற்சியினால் உடலை பேணுதலும் ஆரோக்கியமான உணவை உண்பதும் சீராக மலங்களை அகற்றலுமாகிய இந்நான்கு சரிவர செய்த்து நல்லவைகளைச் சொல்லி தீயவைகளை சொல்லாமல் தவிர்த்து சுற்றிநடைபதி உறங்காது உணர்ந்து வாழ்வோர் மேதைகலாகும் நிலை பெறுவர்.

 பாடல் 9

நாளநதிகோறின் றுகணகழீஇத்தெய்வத்தைத்
தானறியுமாற்றாழுதெழுகல்கந்தி
நின்று தொழுதல் பழி

பொருள்

காலை பொழுதில் கண் விழித்து பல் துவக்கி காலைக்கடன்களை முடித்தபின் தான்  வணங்கும் தெய்வத்தை தொழுது அன்றைய நாளின் வேலைகளை துவக்க வேண்டும் பின்பு மாலை நேரத்தில்  தான்  வணங்கும் தெய்வத்தை நின்றபடி இல்லாமல் அமர்ந்து தொழுதால் நன்று.

 பாடல் 10

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல்  ஊண்பொழுது
வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலூறல்  ஈரைந்துழ்

பொருள்

நீராடல் என்பது உடம்பை சுத்தப்படுத்தும் செயல் கீழ்வரும் பத்து நிகழ்வுகளில் பொருட்டு நீராடுதல் அல்லது நீரால் சுத்தப்படுத்துதல் நன்மை தரும் அச்செயல்கள் யாதெனில் தீய கனா கண்ட பின் தூங்கி எழுந்த பின் மலம் கழித்த பின் சிறுநீர் கழித்தபின் உண்ட உணவு செரிக்காமல் வெளிவந்தபின்  அசுத்த பொருட்களை தொட்டபின் அசுத்த செயலை செய்தவருடன் நெருக்கத்தில் இருந்த பின் தலை முடி திருத்திய பின்  கடவுளை தொழும் முன் உணவு அருந்தும் முன் என்பனவாம் 

Friday, December 15, 2023

ஆசாரக்கோவை பாடல் 1 - 5


கயத்தூர் பெருவாயின் முள்ளியார் இயற்றிய

ஆசாரக்கோவை



 





பாடல் 1 - 5 

பாடல் 1

நன்றியறிதல் பொறையுடைமை யின்சொலோ
டின்னாத வெவ்வுயிர்க்கு ஞ்செய்யாமைகல்வியோ
டொப்புரவாற்றவறிதலறிவுடைமை

நல்லினத்தாரோடுநட்டலிவையெட்டுஞ்
சொல்லியவாசாரவித்து

பொருள்

தனக்கு பிறர் செய்த நன்மைகளை அறிதலும் தனக்கு பிறர் செய்த தீமைகளை பொருத்தலும் இன்சொல்லும் எல்லா உயிர்க்கும் துன்பம் செய்யாமையும் கல்வியும் ஒப்பிட்டு உணர்ந்து அறிதலும்  அறிவுடைமையும் நல்ல பண்புகளையுடையவருடன் நட்பு பாராட்டுவதும் மாகிய எட்டு பண்புகளும் பின்பற்றவேண்டுய ஆசாரங்களாம்

பாடல் 2

பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம்வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றங்கல்வி, நோயின்மை
யிலக்கணத்தாலிவ் வெட்டுமெய் துபவென்று
மொழுக்கம் பிழையாதவர்

பொருள்

நித்தமும் அசாரத்தை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவருக்கு நல்ல வாழ்கை சூழல் நீண்ட ஆயுள் செல்வம் அழகு நிலம் மகிழ்ச்சி கல்வி மற்றும் நல்ல ஆரோக்கியம் எனும் இவை எட்டும் அவைகளின் இலக்கணத்துடன் அமையப்பெறுவர்

பாடல் 3

தக்கிணைவேள்வி தவங்கல்வியிந்நான்கு
முப்பாலொ ழுக்கினாற்காத் துய்க்கவுய்யாக்கா
லெப்பா லுமாகாகெடும்

பொருள்

சிறப்புடன் வாழ நான்கு நல்ல செயல்களான பெரியோர்களை பேணுதல் நல்ல செயல்களை செய்தல் தியானத்தால் மனதை செம்மை படுத்துதல் கல்வி கற்றல்  என்னும் இவை நான்கையும் முப்பால் எனப்படும் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் மூலம் செய்யாவிடில் இந்நான்கும் வாழ்வில் பயனில்லாமல் போகும்

பாடல் 4

வைகறையாமந் துயிலெழுந் துதான் செய்யு
நல்லறமுமொ ண்பொருளுஞ்சிந்தித் துவாய்வதிற்
றந்தையுந் தாயுந்தொழுதெழுகவென்பதே
முந்தையோர் கண்டமுறை

பொருள்

வைகறை இறுதி ஜாமத்தில் உறக்கத்தில் இருந்து விழித்து காலைக்கடன்களை முடித்து அன்று  செய்ய வேண்டிய நல்ல செயல்களையும் அழகான வாழ்வை அமைத்து தரும் பொருளை ஈட்டும் செயல்களை மனதில் ஆலோசித்து தந்தை தாயை வணங்கி அன்றைய காரியத்தி தொடங்குக என்பது முன்னோர் சொன்ன முறை.

பாடல் 5

எச்சிலார் தீண்டார்பசுப்பார்ப்பார் தீத்தேவ
ருச்சந்தலையோடி வையென்பயாவருந்
திடபததா றறீண்டாப்பொருள்

பொருள்

பசு சான்றோர் நெருப்பு தேவர்கள் உச்சந்தலை எனும் இவை  ஐந்தும் தீண்டப்பட கூடாது தீண்டினால் இவை  ஐந்தும் கடும் விளைவுகளைத்  தரும்

மறை பொருள்

புலவர் உரைக்கும் ஐந்து காரனிகளும் ஒரு ராஜாங்க அமைப்பாக காணும் நிலையில் பசு சான்றோர் நெருப்பு தேவர்கள் உச்சந்தலை என்பவை இளவரசர் ராஜகுரு படைத்  தளபதி மஹாராணி மகாராஜா  என்று ஐந்து அரசவை பதவிகளை குறிக்கின்றது இந்த ஐந்து அரசவை பதவிகளை யாரொருவர் சீண்டினாலும் கடும் விளைவுகளை சந்திக்க நேரும்.

மறை பொருள்

புலவர் உரைக்கும் ஐந்து காரனிகளும் வான சாஸ்திராத்தை  வைத்து பார்கையில் பசு சான்றோர் நெருப்பு தேவர்கள் உச்சந்தலை என்பவை புதன் குரு செவ்வாய் சந்திரன் சூரியன் என்று ஐந்து கிரஹங்களை குறிக்கின்றது இந்த ஐந்து கிரகங்களையும் சனி அல்லது ராகு சீண்டினால் கடும் விளைவுகளைத்  தரும்.






Geopolitics at Pause

 Geopolitics at Pause As an author there is a self-giving freedom for imagination and a diplomatic freedom of expressing the same. Not all t...